மதுக்கரை பொது மயானம் ஆக்கிரமிப்பு: திராவிட தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர்

published 2 years ago

மதுக்கரை பொது மயானம் ஆக்கிரமிப்பு: திராவிட தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர்

கோவை: பொது மயானம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாகக் கூறி திராவிட தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

திராவிட தமிழர் கட்சி கோவை மாவட்ட மதுக்கரை ஒன்றிய செயலாளர் முருகன் மதுக்கரை மார்க்கெட் பகுதி மக்களுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அவர் அளித்த மனுவில் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள பொது மயானத்தில் குப்பை கொட்டி வருவதாகவும் ஆக்கிரமிப்பு பணிகள்  நடைபெறுவதாகவும் ஆக்கிரமிப்பு செய்தவர்களை மீது நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக பொது மயானத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளவும் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் பொருட்டு மயானத்தைச் சுற்றிலும் வேலி அமைத்துத் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe