கருமத்தம்பட்டியைச் சேர்ந்த 2 சிறுமிகள் மாயம்

published 2 years ago

கருமத்தம்பட்டியைச் சேர்ந்த 2 சிறுமிகள் மாயம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவை கருமத்தம்பட்டியை அடுத்த உச்சப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் துளசிமணி (17). இவர் அங்குள்ள தனியார்ப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். பின்னர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வீட்டிலிருந்து வந்தார்.
சம்பவத்தன்று துளசிமணி வீட்டின் அருகில் உள்ள கடைக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து ரமேஷ் கருமத்தம்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான துளசிமணியைத் தேடி வருகின்றனர்.
இதேபோன்று பீகாரைச் சேர்ந்தவர் இந்துதேவி.  இவரது மகள் ரூபாகுமாரி (16). இந்துதேவி தனது மகளுடன்  கருமத்தம்பட்டியை அடுத்த வளையப்பாளையம் பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று  ரூபாகுமாரி வீட்டிலிருந்து வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த  இந்துதேவி கருமத்தம்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூபாகுமாரியைத் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe