தாய் கண்டித்ததால் விரக்தி: காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

published 2 years ago

தாய் கண்டித்ததால் விரக்தி: காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவை மதுக்கரை அன்பு  நகரைச் சேர்ந்தவர் விஜேஷ் (வயது 36), தொழிலாளி. இவரது மனைவி கிருத்திகா (33). கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவர்கள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கிருத்திகா கணவருக்குத் தெரியாமல் சிலரிடம் கடன் வாங்கியுள்ளார்.
மேலும் அடிக்கடி யாரிடமோ பேசி வந்ததாகத் தெரிகிறது. இதனை விஜேஷ் கண்டித்தார். பின்னர் பொள்ளாச்சியில் உள்ள கிருத்திகாவின் தாயார் மகாலட்சுமிக்கு போன் செய்து வீட்டிற்கு வந்து தனது மனைவிக்கு அறிவுரை கூறுமாறுத் தெரிவித்தார்.
இதையடுத்து மகாலட்சுமி பொள்ளாச்சியிலிருந்து மகள் வீட்டிற்கு வந்து தனது மகளுக்கு அறிவுரை கூறிக் கண்டித்தார். இதனால் கிருத்திகா மனவேதனை அடைந்தார்.
சம்பவத்தன்று மகாலட்சுமி வீட்டிற்கு வெளியே விஜேஷிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அறையிலிருந்த கிருத்திகா விரக்தி அடைந்து அறையின் கதவைப் பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டுக் கொண்டார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விஜேஷ் கதவை உடைத்து தூக்கில் தொங்கிய கிருத்திகாவை மீட்டார். பின்னர் மதுக்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe