நாட்டியப்பள்ளியில் சாமி சிலைகளை திருடியவர்கள் கைது

published 2 years ago

நாட்டியப்பள்ளியில் சாமி சிலைகளை திருடியவர்கள் கைது

கோவை: தனியார் நாட்டிய பள்ளியின் பூட்டை உடைத்து சிலைகள் திருடிய சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் முரளி (50). இவர் அதே பகுதியில் நாட்டியப்பள்ளியை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு நாட்டிய பள்ளிக்கு வந்த மர்ம நபர்கள் கதவு உடைத்து அங்கிருந்த நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை, இரண்டு குத்து விளக்குகள் ஆகியவை திருடிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இரண்டு மர்ம நபர்கள் கட்டை பையில் சிலைகளை வைத்து எடுத்துச் சென்றது பதிவாகியிருந்தது.

இதையடுத்து தலைமறைவான மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் சுந்தராபுரம் மாச்சம்பாளையம் ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்த கார்த்திக் (25) மற்றும் கிரன் (22). என்பதும், மது போதையில் கூடுதல் மது பாட்டில்களை வாங்க திருடியதும்  தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த சிலைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe