மொபட்டுகளை திருடியவர் கைது

published 2 years ago

மொபட்டுகளை திருடியவர் கைது

கோவை:  கோவை மதுக்கரை குரும்பபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ்(48). இவர் சம்பவத்தன்று டிகே மார்க்கெட்டில் உள்ள பழக்கடை முன்பு மொபட்டை நிறுத்தி விட்டு பழங்கள் வாங்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மொபட்டை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்று விட்டார். இது குறித்து நாகராஜ் கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதேபோல், டாடாபாத் அழகப்பா தெருவை சேர்ந்த ராஜ்குமார்(59) என்பவர் நேற்று முன்தினம் கனிராவுத்தர் தெருவில் உள்ள ஒரு கடை முன்பு தனது மொபட்டை நிறுத்தியிருந்தார்.

சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மொபட்டை காணவில்லை. இது குறித்து அவர் கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இருவரும் அளித்த புகாரின் பேரில் கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், அவர்களின் மொபட்டை திருடியது சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்த கூலி தொழிலாளி அரவிந்த்(31) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து இரண்டு மொபட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe