கோவையில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை பறிப்பு

published 2 years ago

கோவையில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை பறிப்பு

கோவை: கோவையில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் 6.5 பவுன் நகை திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் கல்பனா(52). கொடிசியா அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வேலைக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பஸ் காமராஜர் ரோடு லயன்ஸ் பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது அவரது கழுத்தில் கிடந்த 6.5 பவுன் தங்க நகை திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து அவர் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe