மதுக்கரையில் கொள்ளை அடிக்க வந்த கணவன்-மனைவி: தப்பி ஓடிய கணவனுக்கு வலைவீச்சு

published 2 years ago

மதுக்கரையில் கொள்ளை அடிக்க வந்த கணவன்-மனைவி: தப்பி ஓடிய கணவனுக்கு வலைவீச்சு

கோவை: கோவை மதுக்கரை அருகே உள்ள போடிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், ஐ. டி. ஊழியர். கடந்த 27-ஆம் தேதி இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள பெற்றோரைப் பார்க்கச் சென்றார். நேற்று இரவு 11 மணியளவில் ஒரு தம்பதி மொபட்டில் ராஜேஷ்குமாரின் வீட்டு முன்பு வந்தனர். அவர்கள் மொபட்டை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தனர்.

பின்னர் வீட்டின் முன் பக்கக் கதவை உடைத்துக் கொள்ளையடிக்க முயன்றனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் திருடன்... திருடன்... எனச் சத்தம் போட்டனர். பொதுமக்கள் வருவதைப் பார்த்த தம்பதி 2 பேரும் தப்பி ஓடினர். அப்போது பெண் மட்டும் பொதுமக்களின் கையில் சிக்கிக் கொண்டார். அவருடன் வந்த ஆண் தப்பி ஓடி விட்டார். பின்னர் பொதுமக்கள் கொள்ளையடிக்க முயன்ற பெண்ணை மதுக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் ஒண்டிப்புதூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தைச் சேர்ந்த தேவி என்ற துர்கா தேவி (வயது 28) என்பது தெரிய வந்தது. தப்பி ஓடியவர் அவரது கணவர் பிரகாஷ் (31) என்பதும் தெரிய வந்தது. தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe