ராமஜெயத்தின் கொலையாளிகள் பற்றித் தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு: சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வு பிரிவு போஸ்டர்

published 2 years ago

ராமஜெயத்தின் கொலையாளிகள் பற்றித் தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு: சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வு பிரிவு போஸ்டர்

கோவையின் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/J30Hw99ftHR2wHiYb8sllV

கோவை: அமைச்சர் கே.என்.நேருவின் உடன்பிறந்த சகோதரர் ராமஜெயம். இவர் கடந்த -ம் ஆண்டு மார்ச் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அந்நிலையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா ராமஜெயத்தைப் படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். 

இதன்படி திருச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ராமஜெயத்தை ரவுடிகள் கடத்திச் சென்று படுகொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் சென்றது. அவர்களும் தொடர்ந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர். 

கொலை நடந்து 10 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் பிடிபடாமலுள்ள நிலையில் சிபிசிஐடி போலீசார் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாகச் சரியான தகவல்களைத் துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும், மேலும் துப்பு கொடுப்பவர்களின் தகவல் ரகசியம் காக்கப்படும் என்றும் போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்துள்ளனர். இந்த போஸ்டர் கோவை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe