சூலூர் பகுதியில் 204 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: விற்பனைக்குப் பதுக்கி வைத்திருந்த 7 நபர்கள் கைது

published 2 years ago

சூலூர் பகுதியில் 204 கிலோ குட்கா  பொருட்கள் பறிமுதல்: விற்பனைக்குப் பதுக்கி வைத்திருந்த 7 நபர்கள் கைது

கோவை: கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருள்களுக்கு எதிராக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் இன்று (07.02.2023) சூலூர் பெட்டிக்கடைகளில் குட்கா பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் பெட்டிக்கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அதில் குட்கா பொருட்களை வெவ்வேறு பகுதிகளில் விற்பனைக்குப் பதுக்கி வைத்திருந்த பொன்னுசாமி என்பவரது மகன் கண்ணன் (42), மூர்த்தி என்பவரது மகன் ரத்னா மூர்த்தி (46), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீர முகைதீன் என்பவரது  மகன் முகமது (48), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நொண்டி சாமி என்பவரது மகன் ஜெயபாலன் (33),   சூலூர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மகன் சச்சிதானந்தம் (65), சுப்பையா என்பவரது மகன் பரமசிவம் (57) மற்றும் முருகன் என்பவரது மகன் அருணாச்சலம் (55) ஆகிய 7 நபர்களைக் கைது செய்தனர்.

அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 204 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

போதைப் பொருட்கள் விற்பனை குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப் பொதுமக்கள் தயங்காமல் அழைத்திருங்கள் கோவை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe