அரசு கலைக்கல்லூரி அருகே கோஷ்டி மோதல்.. இருவர் கைது

published 2 years ago

அரசு கலைக்கல்லூரி அருகே கோஷ்டி மோதல்.. இருவர் கைது

கோவை: கோவை அரசு கலை கல்லூரி அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் வீரப்பன் (20). இவர் கோவை அரசு கலை கல்லூரியில் பி.ஏ., வரலாறு 3ம் ஆண்டு படித்து வருகிறார். கோவையில் மற்றொரு தனியார் கல்லூரியில் படிக்கும் வீரப்பனின் நண்பர் ஒருவரை அவரது கல்லூரி மாணவர்கள் சிலர் தாக்கி உள்ளனர். இது குறித்து தாக்குதலுக்கு உள்ளான நபர் நண்பரான வீரப்பனிடம் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து பீளமேடு சென்ற வீரப்பன் தனது நண்பரை தாக்கிய சிலரை அழைத்து சமாதானம் செய்து வைத்தார். இது தொடர்பாக வீரப்பனுக்கும், சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று வீரப்பன் கல்லூரியில் இருந்தார். 

அப்போது அங்கு வந்த 4 பேர் அவரிடம் பேச வேண்டும் என தனியாக அழைத்து சென்றனர். பின்னர் அரசு கலை கல்லூரி பின்புற கேட் அருகே வைத்து தகாத வார்த்தைகளால் பேசி இரும்பு பைப்பால் வீரப்பனை தாக்கி விட்டு மிரட்டி தப்பி சென்றனர்.

இதில், காயமடைந்த வீரப்பனை சிலர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

அதில், வீரப்பனை தாக்கியது கோவை பீளமேடு தனியார் கல்லூரியில் படிக்கும் 17 மற்றும் 18 வயதுடையை மாணவர்கள் என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். தாக்குதல் நடத்திய மற்ற 2 பேர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe