கருமத்தம்பட்டி அருகே ஆதரவு கொடுத்த வீட்டில் 4 1/2 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற இளம்பெண்

published 2 years ago

கருமத்தம்பட்டி அருகே ஆதரவு கொடுத்த வீட்டில் 4 1/2 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற இளம்பெண்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை: கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையம் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் குமார், வயது ௨௫, மில் தொழிலாளி. இவரது மனைவி கீதா. கடந்த 12ம் தேதி இவர் கோவில் திருவிழாவுக்காகப் பட்டக்காரன் புதூரிலுள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்றார்.

பின்னர் அவருடன் துணி எடுப்பதற்காக புளியம்பட்டி சென்றார். வீட்டுற்கு திரும்பும்போது புளியம்பட்டி பஸ் நிலையத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அனுசியா 24 என்ற பெண் தனியாக எங்கு செல்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தார். இதனைப் பார்த்த கீதா அவரின் அருகே சென்று ஏன் தனியாக நிற்கிறீர்கள் என்று கேட்டார். 

அதற்கு அந்த இளம்பெண் தனக்கு யாரும் இல்லை என்றும் ஏதாவது வேலை கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து அனுஷ்காவை கீதா தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர் அந்த பகுதியிலுள்ள மில்லில் அவரை வேலைக்குச் சேர்த்துவிட்டார் கடந்த ஐந்து நாட்களாக வேலைக்குச் சென்று வந்த அனுசியா தனது பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் சொந்த ஊருக்குச் செல்வதாககூறிவிட்டுச் சென்றார். 

அப்போது கீதா தனது வீட்டில் உள்ள பீரோவைத் திறந்து பார்த்தபோது செயின், கம்மல் உள்பட 4 1/2 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கீதாவின் கணவர் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதரவு கொடுத்த வீட்டில் நகைகளைத் திருடிச் சென்ற அனுசுயாவைத் தேடி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe