கோவையில் உணவு டெலிவரி செய்யும் நபரை தாக்கியவர் கைது

published 2 years ago

கோவையில் உணவு டெலிவரி செய்யும் நபரை தாக்கியவர் கைது

கோவை: கோவை சோமையம்பாளையத்தை சேர்ந்தவர் ராம்குமார்(45). உணவு டெலிவரி ஊழியர். இவர் நேற்று முன்தினம் காந்திபுரம் காலிங்கராயன் தெருவில் பைக்கில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பைக்கில் வந்த தனியார் பஸ் டிரைவர் குனியமுத்தூர் மைல்கல்லை சேர்ந்த யுனேஷ்(27), என்பவர் ராம்குமாரிடம் ஏன் சாலையில் நிற்கிறாய், ஓரமாக நிற்க வேண்டியதுதானே என கேட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த யுனேஷ் தகாத வார்த்தைகளால் பேசி ராம்குமாரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்றார். அவரை துரத்தி சென்று ராம்குமார் பிடிக்க முயன்றார்.

ஆனால் மீண்டும் அவரை கீழே தள்ளி தாக்கிவிட்டு யுனேஷ் அங்கிருந்து சென்றார். இதில் காயமடைந்த ராம்குமாரை சிலர் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது தொடர்பாக காட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய யுனேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe