கோவையில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் கைவரிசை..!

published 1 year ago

கோவையில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் கைவரிசை..!

கோவை: கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் வீட்டில் 30 பவுன் நகை, பணம் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பீளமேடு ஜீவா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(37). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு பல்லடத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ. 15 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீடு பூட்டப்பட்டிருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து சுரேஷ் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு கதவு மற்றும் பீரோ உள்ளிட்ட இடங்களில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். 

இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe