கோவை ஈச்சனாரி அருகே இருசக்கர வாகன விபத்து: கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி

published 1 year ago

கோவை ஈச்சனாரி அருகே இருசக்கர வாகன விபத்து: கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி

கோவை: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்தவர்கள் அலெக்ஸ் ஜோசப் (20) மற்றும் சல்மான் (20). இருவரும் கோவை ஈச்சனாரி பகுதியில் அறை எடுத்து தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.

இந்நிலையில் அறையிலிருந்த அலெக்ஸ் ஜோசப் மற்றும் சல்மான் ஆகிய இருவரும் டீ குடிப்பதற்காக நள்ளிரவு 2 மணிக்குத் தனது நண்பரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு மலுமிச்சம்பட்டி நோக்கி பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் சென்றனர். பின்னர் மீண்டும் அறைக்கு வருவதற்காக சர்வீஸ் சாலையில் அதிவேகமாக வந்த போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர தடுப்பின் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த மதுக்கரை காவல்துறையினர் மாணவர்களின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe