கோவையில் அக்காவுடன் பேசியதை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை

published 1 year ago

கோவையில் அக்காவுடன் பேசியதை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை

கோவை: கோவை அடுத்துள்ள வேடப்பட்டி நம்பியழகம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகன்ராஜ்(33). பெயிண்டர். இவரது அக்காவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மதன்ராஜ்(32) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஜெகன்ராஜுக்கும், மதன்ராஜுக்கும் இடையே அடிக்கடி தகராறு எழுந்து வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல், நேற்று இரவு ஜெகன்ராஜ், மதன்ராஜ் வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மதன்ராஜை, ஜெகன்ராஜ் தாக்கியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மதன்ராஜ் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து ஜெகன்ராஜை சரமாரியாக குத்தியுள்ளார்.  இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மதன்ராஜ் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏற்றி அந்தப் பகுதியில் உள்ள மின் மயானம் அருகே இறக்கி விட்டார். பின்னர் மதன்ராஜ் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஜெகன்ராஜை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான மதன்ராஜ் தேடி வந்தனர். அவரை இன்று காலை தேனி அருகில் வைத்து போலீசார் கைது செய்தனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe