கோவையில் குடிபோதையில் காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரை மிரட்டிய இளம் பெண்

published 1 year ago

கோவையில் குடிபோதையில் காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரை மிரட்டிய இளம் பெண்

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள பாய்தோட்டத்தைச் சேர்ந்த 38 வயது இளம் பெண், நேற்று அன்னூர் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்த காவலரிடம் இளம் பெண் தன்னை தனது கணவர் ஒருவருடத்திற்கு முன்பு திருமணம் செய்ததாகவும், தற்போது அவர் வீட்டிற்கு வருவதில்லை எனவும் புகார் கூறினார்.

மேலும், தனது கணவர் தன்னை கொலை செய்ய முயற்சி செய்வதாகவும் கூறினார். மேலும், "நான் ஏற்கனவே சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியுள்ளேன். எனது குடும்பத்தினர் போலீஸ் சூப்பிரண்டாகவும், கலெக்டராகவும் பணியாற்றி வருகின்றனர். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் உங்களை வேலையை விட்டு துரத்திவிடுவேன்" என்று கூறினார்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இளம் பெண் குடிபோதையில் காவல் நிலையத்திற்கு வந்து கணவர் மீது புகார் எடுக்க சொல்லி காவல் துறையினரை மிரட்டியது தெரியவந்தது. 

இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் இளம் பெண்ணை மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்கும்படி அனுப்பி வைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe