மேட்டுப்பாளையம் நான்குவழி சாலையில் 'ரெடிமேட்' மழைநீர் வடிகால்கள்

published 1 year ago

மேட்டுப்பாளையம் நான்குவழி சாலையில் 'ரெடிமேட்' மழைநீர் வடிகால்கள்

கோவை: காரமடையில் சாலையை விரிவாக்கம் செய்து, இருபக்கமும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

மேட்டுப்பாளையம், காரமடை வழியாக, கோவை செல்லும் மெயின் சாலை, தேசிய நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்டதாகும். கோவை கவுண்டம்பாளையத்திலிருந்து, சின்னமத்தம்பாளையம் வரை சாலை விரிவாக்கம் செய்து, நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோன்று காரமடை லாரி உரிமையாளர் பெட்ரோல் பங்கிலிருந்து, மேட்டுப்பாளையம் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வரையுள்ள சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

தற்போது சின்னமத்தம்பாளையத்திலிருந்து, காரமடை லாரி உரிமையாளர் பெட்ரோல் பங்க் வரை உள்ள சாலையை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.

முதல் கட்டமாக சாலையில், இரு பக்கம் இரண்டு மீட்டருக்கு விரிவாக்கம் செய்ய, குழி தோண்டி, ஜல்லிக்கற்கள் நிரப்பப்பட்டது. விரிவாக்கம் செய்யும் இடத்தில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. அதன் பின்பு நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. 

இந்நிலையில் சாலையின் இரு பக்கம், மழை நீர் செல்ல ‘ரெடிமேட்’ கான்கிரீட் தொட்டிகள் பதித்து, கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து காரமடை நகரிலுள்ள சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:

“நீண்ட நாட்களுக்கு பிறகு சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் சாலையின் இரு பக்கம் மழைநீர் வடகால்கள் அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. இதில் காரமடை நகரில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, வடிகால்கள் அமைக்க வேண்டும். ஆக்கிரப்புகளை எடுக்காமல், சாலையில் சாக்கடை அமைத்தால் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe