விடுமுறைக்கு எங்கே செல்லலாம் என யோசிக்கிறீர்களா... கோவை- பீகார் இடையே வாராந்தர சிறப்பு ரயில்...

published 1 year ago

விடுமுறைக்கு எங்கே செல்லலாம் என யோசிக்கிறீர்களா... கோவை- பீகார் இடையே வாராந்தர சிறப்பு ரயில்...

கோவை: கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பீகாரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் கோவை-பீகார் இடையே வாராந்தர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

"கோவையில் இருந்து பீகார் மாநிலம் பராணிக்கு வாராந்தர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதன்படி வருகிற 5-ஆம் தேதி முதல், புதன்கிழமை தோறும் இரவு 12.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் (எண் 03358) புறப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு பீகார் மாநிலம் பராணி சென்றடையும். இந்த ரெயிலானது வருகிற 03. 05. 2023 வரை இயக்கப்பட உள்ளது.

மறுமார்க்கமாக வருகிற 1-ஆம் தேதி முதல் பீகார் மாநிலம் பராணியில் இருந்து வாரத்தின்  சனிக்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 03357) செவ்வாய்க்கிழமை அதிகாலை  4 மணிக்கு கோவை வந்தடையும்.

இந்த ரயிலானது வருகிற 29. 04. 2023 வரை இயக்கப்படும். இந்த ரயிலில் ஏ. சி. 2 டயர் பெட்டிகள்-2, ஏ. சி. 3 டயர் பெட்டிகள்-4, தூங்கும் வசதி பெட்டிகள்-12, பொதுப்பிரிவு 2-ஆம் வகுப்பு பெட்டிகள் -4 இணைக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு ரயிலானது ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, எழுறு, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், விழியங்கரம், ராயகடா, திட்டலகார், சம்பலூர், ஜார்சுடா, ரோர்கேலா, ஹத்தியா, ராஞ்சி, முறி, போகரோ ஸ்டீல் சிட்டி, தன்பாத், பராக்கர், சித்தரஞ்சன், ஜமந்தரா, மதுபுர், ஜாஜ்ஹா, கியூல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe