பணம் கேட்டு மிரட்டி லாரி கிளீனரை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள்

published 1 year ago

பணம் கேட்டு மிரட்டி லாரி கிளீனரை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள்

கோவை: கோவையில் பணம் கேட்டு மிரட்டி கிளீனரை கத்தியால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (23). இவர் மாநகராட்சி லாரியில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று கோகுலகிருஷ்ணன் தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் கோகுலகிருஷ்ணனிடம் பணம் கேட்டு மிரட்டினர்.

அவர் கொடுக்க மறுத்ததால் இருவரும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் அதிகரிக்கவே ஆத்திரமடைந்த இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். மேலும் கோகுலகிருஷ்ணனை கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

கத்திக்குத்தில் காயமடைந்த கோகுலகிருஷ்ணனை அவரது நண்பர் ஒருவர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக போத்தனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி கிளீனரை கத்தியால் குத்திய வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சர்புதீன்(25), கிஷோர்(25) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe