புளியகுளம் பொதுமக்கள் திடீர் மறியல்

published 1 year ago

புளியகுளம் பொதுமக்கள் திடீர் மறியல்

கோவை: கோவை மாநகராட்சி 66 வது வார்டு புளியகுளம் பகுதியில் அமைந்துள்ளது இங்குள்ள காந்த சாமி வீதி சின்ன மருதாச்சல வீதி ஆறுமுகசாமி வீதி சந்தியாகு வீதி ரெட் பீல்ட் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 நாட்களாக குடி தண்ணீர் மற்றும் உப்பு தண்ணீர் ஆகியவை விநியோகம் செய்யப்படவில்லை இதன் காரணமாக இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

இதனை எடுத்து உடனடியாக தண்ணீர் விடக் கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் புலியகுளம் விநாயகர் கோயில் ரோட்டில் திரண்டனர். அவர்கள் உடனடியாக தண்ணீர் விட வேண்டும் அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சென்று பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe