கோவையில் கர்ப்பிணிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்: பொதுமக்கள் பாராட்டு

published 1 year ago

கோவையில் கர்ப்பிணிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்: பொதுமக்கள் பாராட்டு

கோவை: கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்தவர் கோகுல் பிரசாந்த். இவரது மனைவி வினோதினி (வயது20). 

நிறைமாத கர்ப்பிணியான வினோதினிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் மிகுந்த வலியுடன் அவர் துடித்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் உடனடியாக சிறுமுகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஊழியர்களுடன் ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது. அப்போது குழந்தையின் தலை வெளியே வந்திருந்தது. இதனால் அவருக்கு பிரசவ வலி அதிகரித்தது.

இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் தினேஷ், பைலட் நந்த கோபால் உதவியுடன் வீட்டில் வைத்து வினோதினிக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தாயும்-சேயும் இருவரையும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். 

சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மக்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe