கோவையில் வளர்ப்பு நாயின் மேல் கல்லை போட்டு கொன்ற சிறுவன்: சீர்திருத்த பள்ளியில் அடைப்பு

published 1 year ago

கோவையில் வளர்ப்பு நாயின் மேல் கல்லை போட்டு கொன்ற சிறுவன்: சீர்திருத்த பள்ளியில் அடைப்பு

கோவை: கோவை ரத்தினபுரி பகுதி சுப்பிரமணிய கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஜீவா(வயது 63). இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் நேற்று இரவு குடிபோதையில் தனது வீட்டிற்கு சென்றார்.

அப்போது அவர் தெருவோரம் தூங்கி கொண்டிருந்த ஜீவாவின் நாயை சீண்டினார். உடனடியாக நாய் சிறுவனைப் பார்த்து குரைத்தது. நாய் தன்னை பார்த்து குரைத்ததால் சிறுவன் ஆத்திரம் அடைந்தார். 

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற சிறுவன் குடிபோதையில் அங்கு கிடந்த கல்லை எடுத்து நாயின் தலையில் போட்டார். இதில் நாய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. 

இதற்கிடையே நாயின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வெளியில் ஓடி வந்தனர். அப்போது சிறுவன் நாயின் மேல் கல்லை போட்டு கொன்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து நாயின் உரிமையாளர் ஜீவாவிற்கு தகவல் கொடுத்தனர். 

அவர் இதுகுறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் நாயை கொன்ற சிறுவனை கைது செய்தனர். 

பின்னர் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe