கோவையில் வழக்கறிஞரின் வீட்டில் நகை பணம் கொள்ளை

published 1 year ago

கோவையில் வழக்கறிஞரின் வீட்டில் நகை பணம் கொள்ளை

கோவை: கோவையைச் சேர்ந்த வழக்கறிஞரான சுரேஷ்குமார், கோவை நல்லாம்பாளையம் சபரி கார்டன் ஆறாவது வீதியில் தன் குடும்பத்துடன் இவர் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று தன் குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இவரது வீட்டின் வாட்ச்மேன் இவரது வீட்டின் மேற்புறம் உள்ள வீட்டில் தான் குடியிருக்கிறார்.இந்த நிலையில் தங்கள் வீட்டின் கேட் சாவியை அவரது வாட்ச் மானிடம் கொடுத்து சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் அவரது வாட்ச்மேன் செடிகளுக்கு தண்ணீர் விடுவதற்காக கீழே சென்றபோது அவர்களது வீட்டின் முன்புற கிரில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே உள்ள மெயின் கதவும் திறந்து கிடப்பதை பார்த்து வழக்கறிஞரான உரிமையாளருக்கு உடனே தகவலை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வழக்கறிஞரின் உறவினர்களுக்கு அவர் உடனடியாக தகவல் சொல்லி போலீசாருடன் அங்கு சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு ஒரு சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe