பேருந்தில் பயணித்த விவசாயியிடம் ரூ. 50 ஆயிரம் திருட்டு

published 1 year ago

பேருந்தில் பயணித்த விவசாயியிடம் ரூ. 50 ஆயிரம் திருட்டு

கோவை: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சாமிசிவானந்தா ரோட்டை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (53). விவசாயி.

இவர் நேற்று கணபதியில் இருந்து சரவணம்பட்டிக்கு பஸ்சில் சென்றபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் யாரோ வைத்தியலிங்கம் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் பணத்தை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.

இது குறித்து வைத்தியலிங்கம் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடும் பஸ்சில் விவசாயியிடம் ரூ. 50 ஆயிரம் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe