கோவையில் நகைக்கடைகளிடம் 2 கிலோ தங்கம் மோசடி

published 1 year ago

கோவையில் நகைக்கடைகளிடம் 2 கிலோ தங்கம் மோசடி

கோவை :கோவையில் விற்பனை செய்து தருவதாக கூறி நகைக்கடைகளில் 2 கிலோ தங்கம் வாங்கி மோசடி செய்ததாக தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை செல்வபுரம் அசோக் நகோவையில் நகைக்கடைகளிடம் 2 கிலோ தங்கம் மோசடிகரை சேர்ந்தவர் தீபக்(32). இவரது மனைவி வர்ஷினி(27). இவர்கள் கோவையில் உள்ள நகைக்கடைகள், நகைப்பட்டறைகளில் தங்கத்தை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதேபோல், அவர்கள் கடந்த 5-1-2023 முதல் 10-2-2023 வரையிலான காலகட்டத்தில் கோவை கடைவீதி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகளில் சுமார் 80 லட்சம் மதிப்பிலான 2 கிலோ 51 கிராம் தங்க நகைகளை வாங்கி அதனை விற்று பணத்தை தருவதாக கூறி பெற்றுள்ளனர். ஆனால் தம்பதியினர் கூறியபடி நகைகளை விற்று பணத்தை கடைக்காரர்களிடம் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர்.

இதனால் ஏமாற்றமடைடைந்தவர்கள் தம்பதியினரிடம் கேட்டபோது அவர்கள் பணத்தை கொடுக்காமல் பல்வேறு காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீபக் மற்றும் அவரது மனைவி வர்ஷினி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe