கோவையில் வெவ்வேறு விபத்தில் வங்கி மேலாளர் மற்றும் வாலிபர் பலி.

published 1 year ago

கோவையில் வெவ்வேறு விபத்தில் வங்கி மேலாளர் மற்றும் வாலிபர் பலி.

கோவை- சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ஜெகநாதனுடன் மோட்டார் சைக்கிளில் உடுமலை- பொள்ளாச்சி சாலையில் சென்றபோது  அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக இவர்கள் மீது மோதியது.

இதில் மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரது நண்பர் ஜெகநாதனுக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கோமங்களம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் முருகன் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல திருப்பூர் காங்கேயம் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது அஷிப் (22). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் அன்னூரில் இருந்து அவினாசி சாலையில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கில் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் அவருக்கு தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து  அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe