வீட்டு வாசலில் நின்றிருந்த இளம் பெண்: ஆபாச சைகை காட்டிய வாலிபர் கைது

published 1 year ago

வீட்டு வாசலில் நின்றிருந்த இளம் பெண்: ஆபாச சைகை காட்டிய வாலிபர் கைது

கோவை: கோவையில் வீட்டு முன்பு நின்றிருந்த இளம்பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டி பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவையை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் பேஷன் டிசைனராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இளம்பெண் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை பார்த்து ஆபாச சைகை காட்டினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் வீட்டுக்குள் சென்று விட்டார். இது தொடர்பாக இளம்பெண் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன்பேரில், காவல் துறையினர் விசாரித்தனர். இதில், இளம்பெண்ணுக்கு கையை காட்டி ஆபாச சைகை மூலம் பாலியல் துன்புறுத்தல் செய்தது செல்வபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த கூலித் தொழிலாளி ஷாஜகான் (34) என்பது தெரியவந்தது. 

காவல் துறையினர் அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe