கோவையில் பணம் தர மறுத்த தாயை தாக்கிய வாலிபர் கைது

published 1 year ago

கோவையில் பணம் தர மறுத்த தாயை தாக்கிய வாலிபர் கைது

கோவை: கோவை குனியமுத்தூர் வீரமாத்தி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (60). இவரது மகன் மணிகண்டன் (34) கூலித் தொழிலாளி. 

இந்நிலையில் இவர் வேலைக்கு சரியாக செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 

இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது தனது தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் இல்லை என்று மறுத்து விட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அவரது தாயை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினார். இதனை தடுக்க வந்த அவரது சகோதரியையும் அவர் தாக்கினார். 

பின்னர் இதுகுறித்து தனலட்சுமி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe