8 ஆண்டுகளுக்கு பின் அடையாளம் தெரிந்து குடும்பத்தினருடன் சேர்ந்த வாலிபர்

published 1 year ago

8 ஆண்டுகளுக்கு பின் அடையாளம் தெரிந்து குடும்பத்தினருடன் சேர்ந்த வாலிபர்

கோவை: கோவை பொள்ளாட்சி சாலை மயிலேரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் உதவும் கரங்கள் என்ற தன்னார்வ அமைப்பு மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித்திரியும் ஆதரவற்ற நபர்களை மீட்டுசிகிச்சையளித்து வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தனக்கு தானே பேசியவாறு சாலையில் சுற்றித்திரிந்த வட மாநில வாலிபர் ஒருவரை இந்த அமைப்பினர் மீட்டு மையத்திற்கு அழைத்து சென்று அவருக்கு உணவு, உடை வழங்கி மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்து வந்தனர். 10 நாட்களுக்கு முன் அந்த வாலிபர் குணமடைந்து பழைய நினைவுகள் திரும்பியது.

விசாரித்ததில் அவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், அவர் கோபால் நிஷாத் என்பவரது மகன் ஜிதேந்தர் (34). என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்த தன்னார்வ அமைப்பினர் இணையதளம் மூலம் ஜிதேந்தர் கூறிய அடையாளங்களை வைத்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு அழைத்து பேசியபோது, ஜிதேந்தரின் அண்ணன் தேவேந்திர நிஷாந்த், சத்தீஸ்கர் மாநில காவல் துறையில் பணியாற்றி வருவது தெரியவந்தது.

தேவேந்திர நிஷாந்தை தொடர்பு கொண்டு பேசிய போது ஜிதேந்தர் அவரது சகோதரர் என்பதும், கடந்த 2015-ல் வீட்டில் இருந்த ஜிதேந்தர் திடீரென மாயமானதும், இது குறித்து உள்ளூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு தேடி வந்ததாகவும் கூறினார். தேவேந்திர நிஷாந்த் நேற்று தனது தம்பியை அழைத்து செல்ல கோவை மயிலேரிபாளையத்தில் செயல்பட்டு வரும் மையத்திற்கு வந்தார்.

அங்கு ஜிதேந்தரை கண்டதும் கட்டிப்பிடித்து அழுதார். அண்ணன் அழுவதை பார்த்து ஜிதேந்திரனும் அழுதார். இதனால் அங்கு சிறிது நேரம் பாச போராட்டம் நடந்தது. பின்னர் அங்கிருந்தவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறிவிட்டு சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு தனது அண்ணனுடன் ஜித்தேந்தர் சொந்த ஊரான சத்தீஸ்கர் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe