நீலகிரி மாவட்டம் நெல்லியாளத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

published 1 year ago

நீலகிரி மாவட்டம் நெல்லியாளத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: டேன்டீ அரசு ஊழியர்களுக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி அன்று சட்டசபையில் நடந்த வனத்துறை மீதான மானிய கோரிக்கையில் 7-வது ஊதியகுழு பரிந்துரையின்படி ஊதியம் நடைமுறைபடுத்த அரசாணை வெளியிடப்படடு.

அந்த ஆணையின் படி, அதனை நடைமுறைபடுத்த ரூ. 6 கோடி தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை டேன்டீ நிர்வாகம் அதனை நடைமுறை படுத்தாமல் ஊழியர்களை ஏமாற்றி வருவதை கண்டித்து நெல்லியாளம் டேன்டீ கோட்ட அலுவலகம் முன்பு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கபொது செயலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் வருகிற 17-ஆம் தேதி குன்னூர் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று டேன்டீ ஊழியர்கள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe