அன்னூரில் சேதம் அடைந்த நீர் தேக்க தொட்டி இடித்து அகற்றம்

published 1 year ago

அன்னூரில் சேதம் அடைந்த நீர் தேக்க தொட்டி இடித்து அகற்றம்

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் வட்டத்திற்குட்பட்ட காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டம்பட்டியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். இந்நிலையில் தொட்டியின் 4 தூண்களும் இடிந்து கீழே விழும் நிலையில் காணப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கிராம சபை கூட்டங்கள் மற்றும் கவுன்சிலர், ஊராட்சி பஞ்சாயத்து தலைவரிடமும் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில் நேற்று இடிந்து விழும் நிலையில் இருந்து நீர் தேக்கத் தொட்டி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மேலும் புதிதாக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தேக்கத் தொட்டி கட்டப்படும் என பஞ்சாயத்து தலைவர் தெரிவித்தார். 

சேதாரம் அடைந்து மக்களின் பாதுகாப்பிற்கு இடையூராக இருந்த குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டதற்காக மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe