மேட்டுப்பாளையத்தில் கூலி தொழிலாளிக்கு கத்திக்குத்து

published 1 year ago

மேட்டுப்பாளையத்தில் கூலி தொழிலாளிக்கு கத்திக்குத்து

கோவை: மேட்டுப்பாளையம் எஸ்.எம். நகரைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (29), கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு டாஸ்மாக் கடையில் மது அருந்தினார். அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள், வெள்ளிங்கிரியிடம் பணம் கேட்டனர். 

ஆனால் அவர் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்த 2 பேரும் அவரை தாக்கி கீழே தள்ளி கத்தியால் குத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் காவல் துறையினர் விரைந்து வந்து காயம் அடைந்தவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தொழிலாளியை கத்தியால் குத்தியது மேட்டுப்பாளையம் பழைய முனிசிபல் ஆபீஸ் சாலையைச் சேர்ந்த சூர்யா (21) மற்றும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி முல்லை நகரைச் சேர்ந்த அன்பு என்ற சந்தோஷ் (19) என்பது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினர், அன்பு என்ற சந்தோசை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவான சூர்யாவை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe