கோவையில் வெவ்வேறு விபத்துகளில் முதியவர் உட்பட 2 பேர் பலி

published 1 year ago

கோவையில் வெவ்வேறு விபத்துகளில் முதியவர் உட்பட 2 பேர் பலி

கோவை: கோவை சரவணம்பட்டி அருகே உள்ள லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ராமசுப்பு (வயது 60). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சரவணம்பட்டி- விளாங்குறிச்சி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமசுப்பு தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராமசுப்பு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

துடியலூர் அருகே உள்ள விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கேசவன் (35), வெல்டர். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வடமதுரை- தடாகம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கேசவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe