என்.டி.சி தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம்

published 1 year ago

என்.டி.சி தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம்

கோவை: பஞ்சாலைகளை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவையில் கஞ்சி காய்ச்சும் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருக்கும் பஞ்சாலைகளை இயக்க வேண்டும்,  பணிக்கொடை, நிலுவையில் உள்ள ஊதியம் வழங்க வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கான போனஸ் மற்றும் இதர பயன்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பஞ்சாலை தொழிலாளர்கள் கோவையில் கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்தினர்.

புலியகுளம் பங்கஜா மின் சாலையில் உள்ள என்.டி.சி ஆலை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில்  ஹெச்.எம்.எஸ், ஏ.டி.பி, சி.ஐ.டி.யு, என்.டி.யு.சி, ஏ.ஐ.டி.யு.சி, எம்.எல்.எஃப், டாக்டர் அம்பேத்கர் என்.டி.எல்.எஃப் உள்ளிட்ட தொழிற் சங்கங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe