தமிழகத்திற்கே விஷமுறிவு சிகிச்சை மையமாகிறது கோவை அரசு மருத்துவமனை

published 1 year ago

தமிழகத்திற்கே விஷமுறிவு சிகிச்சை மையமாகிறது கோவை அரசு மருத்துவமனை

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லுாரியில், விஷமுறிவு அவசர சிகிச்சைக்கான மாநில பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது.

விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள், விஷப்பூச்சிகள் கடியால் பாதிக்கப்படுபவர்களுக்காக சென்னை, கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில் விஷமுறிவு (டாக்ஸிகாலஜி) அவசர சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. 

கோவை அரசு மருத்துவமனையில், கடந்த ஓராண்டுக்கும் மேல், இத்துறை சார்பில், 100க்கு மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதையடுத்து, விஷமுறிவு அவசர சிகிச்சைக்கான மாநில பயிற்சி மையத்தை இங்கு ஏற்படுத்த சுகாதார துறை மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது: பிற மருத்துவமனைகளை ஒப்பிடுகையில், இங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவு. இதையடுத்தே பயிற்சி மையத்தை இங்கு ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் கூடுதல் கருவிகள், நவீன தொழில்நுட்பங்களை தருவிருக்க முடியும். நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க முடியும். பல்வேறு மருத்துவமனை டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe