கோவையில் மதுகுடிக்க என்ற மேலாளரை அடுத்து உதைத்த பார் ஊழியர்கள்

published 1 year ago

கோவையில் மதுகுடிக்க என்ற மேலாளரை அடுத்து உதைத்த பார் ஊழியர்கள்

கோவை: கோவையில் தனியார் நிறுவன மேலாளர் மீது தாக்குதல் நடத்திய டாஸ்மாக் பார் ஊழியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சுந்தராபுரம் மதுக்கரை ரோடு எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் பைரவசாமி(35). தனியார் நிறுவன மேலாளர். இவர் நேற்று முன்தினம் பொள்ளாச்சி ரோடு சிட்கோ எல்ஐசி காலனியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார்.

பின்னர் மது அருந்தி விட்டு டாஸ்மாக் வெளியே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த டாஸ்மாக் பார் ஊழியர்கள் பைரவசாமியிடம் பணம் கொடுத்து விட்டு செல்லுமாறு தெரிவித்தனர். அதற்கு பைரவசாமி தான் ஏற்கனவே பணம் கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் பார் ஊழியர்கள் பணம் கொடுக்கவில்லை என கூறி தகராறில் ஈடுபட்டனர். இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அவர்கள் பைரவசாமியை அடித்து உதைத்தனர். இதில் காயமடைந்த அவர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது தொடர்பாக போத்தனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் தனியார் நிறுவன மேலாளரை தாக்கிய பார் ஊழியர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன்(36), கார்த்திக்(38), போத்தனூர் குறிச்சியை சேர்ந்த சீனிவாசன்(45) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe