அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை: 4 பேர் கைது

published 1 year ago

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை: 4 பேர் கைது

கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் .பத்ரிநாராயணன் அவர்கள் உத்தரவின் பேரில் கோவை மாவட்டக் காவல்துறையினர் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் இன்று (24.04.2023) மேட்டுப்பாளையம் மற்றும் மகாலிங்கபுரம் காவல் நிலைய பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டத்திற்கு விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 4 நபர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இது போன்ற தகவல் குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe