கோவையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

published 1 year ago

கோவையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

கோவை: கோவை களிமங்களம் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆலந்துறை காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை ஆய்வாளர் பாண்டியன் தலைமையிலான காவல் துறையினர் களிமங்களம் பேருந்து நிறுத்தத்தில் சோதனை செய்தனர். 

அப்போது அந்தப் பகுதியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். காவல் துறையினரை பார்த்ததும் அங்கிருந்து ஓட முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட காவல் துறையினர் அவரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த பிரசாந்த் (24) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினர் அவரிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

இதேபோல் மதுக்கரை மற்றும் மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக முஸ்தப்பா (வயது 52), அபுதாகிர் (வயது 24) ஆகியோரையும் காவல் துறையினர் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe