கோவையில் டிரைவருக்கு அரிவாள் வெட்டு

published 1 year ago

கோவையில் டிரைவருக்கு அரிவாள் வெட்டு

கோவை: கோவை ஏரிபட்டி மரம்புடுங்கி கவுண்டனூரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 23), டிரைவர். இவரது உறவினர் சரண்குமார் (21), கூலித் தொழிலாளி.

சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த சரன்குமார் பிரேம்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டினார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த சரண்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரேம்குமாரை வெட்டினார். 

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து நெகமம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சரண்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe