சிங்காநல்லூரில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை

published 1 year ago

சிங்காநல்லூரில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை

கோவை சிங்காநல்லூர் நாராயணசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் ஜெபராஜ்(35). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்ப உறுப்பினர்களுடன் கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள சர்ச்சுக்கு சென்றார்.

பின்னர் வீடு திரும்பிய போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ரூ. 1 லட்சம், 6 கைக்கடிகாரம் மற்றும் 2 செல்போன்கள் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அங்கிருந்த 3 கைரேகை பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe