தொழிலாளி மீது தாக்குதல்; வாலிபர் கைது

published 1 year ago

தொழிலாளி மீது தாக்குதல்; வாலிபர் கைது

கோவை: கோவை புலியகுளம் சவுரிபாளையம் ரோடு பாலசுப்பிரமணியன் நகரை சேர்ந்தவர் ஜெயபாலன்(40). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தார். 

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ஜெயபாலனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி மிரட்டி விட்டு சென்றார். இதில் காயமடைந்த ஜெயபாலனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் விசாரித்தனர். அதில், முன் விரோதம் காரணமாக ஜெயபாலனை தாக்கியது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த தொழிலாளி லோகேஷ்(22) என்பது தெரியவந்தது. 

போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe