கோவையில் மெகா சூதாட்டம்.. 27 பேர் கொண்ட கும்பல் கைது

published 1 year ago

கோவையில் மெகா சூதாட்டம்.. 27 பேர் கொண்ட கும்பல் கைது

கோவை: மேட்டுப்பாளையத்தில் சட்ட விரோதமாக சீட்டு விளையாடிய 27பேர் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து31700 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுறுதிருந்தார்.அதன் அடிப்படையில் மேட்டுப்பாளையம்  பத்ரகாளியம்மன் சாலையில் சட்டவிரோதமாக பணத்தை வைத்து சீட்டு, விளையாடுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து,அந்த பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார் சட்ட விரோதமாக சீட்டு விளையாடிய 27பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட, 31700ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யபட்ட ஈரோடு,கரூர்,பொள்ளாச்சி,கோவை,தாராபுரம்,மேட்டுப்பாளையம்,அன்னூர்,

சிறுமுகை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 27 பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe