சிறுதானிய விழிப்புணர்வு வாக்கத்தான்.. கோவை மக்கள் பங்கேற்பு

published 1 year ago

சிறுதானிய விழிப்புணர்வு வாக்கத்தான்.. கோவை மக்கள் பங்கேற்பு

உணவு பாதுகாப்பு ஆணையம் சார்பில் கோவையில் நடைபெற்ற சிறுதானிய விழிப்புணர்வு வாக்கத்தான்  நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

2023ம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக அரசு அறிவித்ததை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில்  சிறுதானியங்களின்  நன்மையகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவையில் உணவு பாதுகாப்பு ஆணையம் சார்பில் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகள், பெரியவர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என  ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நடைபயணம் மேற்கொண்டனர்.

இந்த வாக்கத்தான் பயணத்தை மத்திய உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கண்ணன், கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். வ.உ.சி மைதானத்தில் தொடங்கிய இந்த வாக்கத்தான் பாலசுந்தரம் சாலை வழியாக அவிநாசி சாலையை வந்தடைந்து மீண்டும் வ.உ.சி மைதானத்தில் நிறைவடைந்தது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe