வாட்ஸ் ஆப்பில் லிங்க் அனுப்பி ரூ. 16.79 லட்சம் நூதன மோசடி

published 1 year ago

வாட்ஸ் ஆப்பில் லிங்க் அனுப்பி ரூ. 16.79 லட்சம் நூதன மோசடி

கோவை: கோவையை சேர்ந்த வாலிபரிடம் வாட்ஸ் ஆப்பில் லிங்க் அனுப்பி ரூ. 16.79 லட்சம் நூதன மோசடி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை காளப்பட்டி நேருநகரை சேர்ந்தவர் சதீஷ்குமார்(34). இவருக்கு வாட்ஸ் ஆப் எண்ணில் குறுந்தகவல் வந்தது. அதில், உள்ள லிங்க்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தார். அதன் மூலம் சதீஷ்குமாரை தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் நாங்கள் கொடுக்கும் பணிகளை முடித்து கொடுத்தால் அதிகம் லாபம் கிடைக்கும் எனவும், ஆன்லைன் முதலீடு மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.

இதனை உண்மை என நம்பிய சதீஷ்குமார் முதலில் ரூ. 5 ஆயிரத்தை அவர் கூறிய வங்கி கணக்கில் முதலீடு செய்தார். அதற்கு லாபமாக சதீஷ்குமாரின் வங்கி கணக்கில் ரூ. 6,400 வரவு வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் சிறிது, சிறிதாக சதீஷ்குமார் ரூ. 16.79 லட்சம் செலுத்தினார்.

ஆனால் அந்த மர்ம நபர் கூறிய படி லாப தொகை கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து சதீஷ்குமார் தான் செலுத்திய ரூ. 16.79 லட்சத்தை எடுக்க முயன்றார். ஆனால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை. மர்ம நபரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. அவர் நூதன முறையில் மோசடி செய்து விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe