வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஓராமா வைக்காதீங்க.. நோட்டமிட்டு திருடுறாங்க..

published 1 year ago

வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஓராமா வைக்காதீங்க.. நோட்டமிட்டு திருடுறாங்க..

கோவை: கோவையில் வீட்டின் உரிமையாளர் ஒருவர் வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவின் ஓரம் வைத்துச் சென்ற  நிலையில், சாவி இருக்கும் இடத்தை நோட்டமிட்ட நபர்கள் வீட்டை திறந்து பணம் மற்றும் டிவி திருடிச்சென்றனர்.

கோவை வேலாண்டிபாளையம் தியாகி குமரன் வீதியை சேர்ந்தவர் மோனிகா. இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வீட்டை பூட்டி சாவியை கதவின் ஓரமாக மறைத்து வைத்து சென்றுள்ளார்.

பிறகு பணி முடிந்து இரவு வந்து பார்க்கையில் யாரோ அந்த சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து, வீட்டிலிருந்த LED டிவி மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள சாய்பாபா காலனி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாவியை கதவின் ஓரம் வைத்து செல்வதை தினமும் நோட்டமிட்டிருக்கும் நபர்களே இந்த திருட்டு செயலை செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe