தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

published 1 year ago

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

கோவை: கோவையில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை வெள்ளக்கிணறு ஒய்.ஜி.எஸ். நகரை சேர்ந்தவர் மணிமாறன் (52). தனியார் நிறுவன மேலாளர். இவர் கடந்த 20ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த வேலை காரணமாக சென்னை சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் கோவை திரும்பினார்.

வீட்டுக்கு சென்றபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் அலமாரியில் வைத்திருந்த 8.5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.85 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. வீட்டில் கடந்த சில நாட்களாக ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த மணிமாறன் இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு பதிவாகியிருந்த ஒரு கைரேகையை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe