கோவையில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்..

published 1 year ago

கோவையில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்..

கோவை: கோவை மாநகரில் நாளை குடி நீர் விநியோகம்  நிறுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

 கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 கோவை மாநகராட்சி பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கும் பில்லூர் குடிநீர் திட்டம்-2ல் வெள்ளியங்காடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் ராமகிருஷ்ணாபுரம் மேல்நிலை குடிநீர்த் தொட்டி வரை உள்ள குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயில் முத்துக்கல்லூர் என்ற இடத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.

 இதனைச் சரிசெய்யும் பணி நாளை (செவ்வாய்) நடைபெற உள்ளது. எனவே, அன்றையதினம், பில்லூர் திட்டம்-2ன் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும்.

 சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், பீளமேடு, சவுரிபாளையம், கணபதி, காந்திபுரம், புலியகுளம், ரத்தினபுரி, சித்தாபுதூர் மற்றும் உக்கடம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.

 எனவே, பொதுமக்கள், சிரமத்தினை பொறுத்துக்கொண்டு, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி வேண்டுகிறோம்.

 இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe