கோவையில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற மூவர் கைது

published 1 year ago

கோவையில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற மூவர் கைது

கோவை:  கோவையில் 70 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் 3 பேரைக் கைது செய்தனர்.

கோவை மாநகரில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே சிலர் போதை மாத்திரைகளைப் பதுக்கி விற்பனை செய்வதாகக் கடைவீதி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும் படி நின்றிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

 அதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர். சோதனை செய்த போது அவர்கள் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது.

வலி நிவாரணி மாத்திரைகளை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி போதைக்காகப் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

 இதனைத் தொடர்ந்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட கரும்புக்கடை சேரன் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பி (எ) அக்பர் அலி(27), குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த தொழிலாளி ரியாஷ் கான்(23) ஆகிய இருவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் இருந்து அவர்களிடம் இருந்து 70 போதை மாத்திரைகள், ஒரு செல்போன், பைக் மற்றும் ரூ. 1,400 பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், ஆர்.எஸ்.புரம் கிருஷ்ணசாமி ரோட்டில் கஞ்சா விற்பனை செய்த மீன் கடை தொழிலாளி தெற்கு உக்கடம் ஜிஎம் நகரைச் சேர்ந்த ஷாஜகான்(30) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

பின்னர் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா, ஒரு மொபட் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe