கோவையில் சாலை பணிகள் எப்படி இருக்கு..? ஆய்வில் ஈடுபட்ட நகராட்சி இயக்குநர்

published 1 year ago

கோவையில் சாலை பணிகள் எப்படி இருக்கு..? ஆய்வில் ஈடுபட்ட நகராட்சி இயக்குநர்

கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள சாலை பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா கோவை மாநகராட்சியின் வார்டு எண் 22 இல் உள்ள குமுதம் நகர் பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலைகளை ஆய்வு செய்தார்.
 

உடன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா கூறும்போது.கோவை மாநகராட்சியில் பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. கோவையில் பாதாள சாக்கடைகள் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிய முடிய சாலைகள் போடப்பட்டு வருகிறது.இரண்டு வருட நிதியை வைத்து 563 சாலைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளோம்.

86 கிலோமீட்டர் சாலைகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. மற்றவைகள் பல்வேறு நிலைகளில் வேலை நடைபெற்று வருகிறது.பழுதடைந்த சாலைகள் செப்டம்பர் மாதத்திற்குள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

தடாகம் சாலை போடப்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில் சாலைகள் போடப்பட்டு வருகிறது. போடப்பட்ட சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தோம். அதேபோல சூலூர் பகுதிகளில் தரம் அற்றதாக போடப்பட்ட சாலைகள் குறித்த தகவல்கள் வைத்து விசாரணை மேற்கொள்ளப்படும். ஜூன் 26 ஆம் தேதி செம்மொழிப் பூங்கா ஒப்பந்தம் போடப்படுகிறது. அதற்குப்பின் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe