பாட்டி வீட்டிலேயே கை வரிசை.. புகார் கொடுத்த பாட்டி..!

published 1 year ago

பாட்டி வீட்டிலேயே கை வரிசை.. புகார் கொடுத்த பாட்டி..!

கோவை: பாட்டி வீட்டில் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களைத் திருடிச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் காளியம்மாள், 63. இவரது பேரன் சிவகங்கையைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 24. 

இவர் காங்கயம் போலீஸ் ஸ்டேஷனில் அடி, தடி வழக்கில் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

பின் அவர் கோவை வந்து பாட்டி காளியம்மாள் வீட்டில் தங்கியிருந்து காங்கயம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார்.

 இந்நிலையில் கடந்த, 3ம் தேதி இரவு காளியம்மாள் தனது உறவினர்களுடன் வேளாங்கண்ணி கோவிலுக்குச் சென்றார். அங்கிருந்து, 6ம் தேதி வீடு திரும்பினார்.

 அப்போது வீட்டில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 8 பவுன் தங்க நகைகள் மற்றும் 1.5 கிலோ வெள்ளி பொருட்கள் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 வீட்டில் இருந்த அவரது பேரன் ஹரிகிருஷ்ணனும் காணாமல் போயிருந்தார்.

 ஹரிகிருஷ்ணனை போனில் தொடர்பு கொண்ட போது அவர் போனை எடுக்கவில்லை.

 தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை ஹரிகிருஷ்ணன் திருடிச் சென்றதை உணர்ந்த காளியம்மாள் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். 

போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவான ஹரிகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe